தேவகோட்டை பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தேவகோட்டை, மே 7: தேவகோட்டை ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.27ம் தேதி காப்பு கட்டுடன் விழா தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் மாலையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.

நேற்று 10ம் நாளில் காலையில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து மாலையில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழங்க தேரின் வடத்தை பிடித்து நான்கு ரத வீதியில் இழுத்து வந்தனர். பின்னர் தேர் கிளம்பிய இடத்திற்கு நிலை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். தேர் வரும் வழியில் நீர் மோர் குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

The post தேவகோட்டை பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: