ஆந்திராவிலிருந்து மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்: தப்பியோடிய டிரைவருக்கு வலை

 

திருத்தணி: ஆந்திராவிலிருந்து ஆற்று மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவிலிருந்து திருத்தணி நோக்கி எம்.சாண்ட் நிரப்பிக் கொண்டு வந்த லாரி டிரைவர் போலீசாரை கண்டதும் லாரியை சாலையில் நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், லாரியில் சோதனை நடத்தினர். அப்போது லாரியில் ஆற்று மணல் நிரப்பி, மேல் பகுதியில் எம்.சாண்ட் கொட்டி கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து லாரியுடன் ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரான சென்னையை சேர்ந்த கார்த்திக்(32) என்பவரை தேடி வருகின்றனர்.

The post ஆந்திராவிலிருந்து மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்: தப்பியோடிய டிரைவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: