டெல்லி: 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத் மாநிலத்தில், மொத்தம் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மராட்டியத்தில் 11 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.