இந்நிலையில் பைசாபாத் தொகுதியில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவதேஷ் பிரசாத் அளித்த பேட்டியில், “கடந்த 10 ஆண்டுகளில் லல்லு சிங் தொகுதி மக்களை பார்க்க ஒருமுறை கூட வரவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அதனால் இப்போது பாஜவுக்கு எந்த பலனும் இல்லை. நான் அயோத்தியில் பிறந்தது என் அதிர்ஷ்டம். ராமரின் கருணையை புறக்கணித்து விட முடியாது. ராமரின் ஆதரவு இந்தியா கூட்டணி வேட்பாளரான எனக்கு முழுமையாக இருக்கும். பாஜ மக்களின் வாழ்க்கையை அழித்து விட்டது. பணவீக்கம் பெருகி விட்டது. வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பைசாபாத் வாக்காளர்கள் பாஜவை தோற்கடிக்க விரும்புகின்றனர் ” என்றார்.
The post இந்தியா கூட்டணிக்கே ராமரின் ஆதரவு: சமாஜ்வாடி கட்சி உறுதி appeared first on Dinakaran.