டெல்லி : மக்களவைத் தேர்தல் நடைமுறையைக் காண 23 நாடுகளைச்சேர்ந்த 75 அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை புரிய உள்ளனர். ஆஸ்திரேலியா, ரஷ்யா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தல் நடைமுறையை பார்வையிடுகின்றனர். இந்தியாவில் வாக்குப்பதிவு நடப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் காண உள்ளனர்.