திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் ஓய்வு பெல் ஊழியர் சடலம் மீட்பு

 

திருவெறும்பூர், மே 4: திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற பெல் ஊழியர் உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் (63) இவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்த நிலையில்அருள்ராஜிக்கு கேத்தனின் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களை கடந்த 10 ஆண்டுகளாக அருள்ராஜ் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி வீட்டிற்குள் சென்றவர் மீண்டும் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லையாம். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அருள்ராஜ் தங்கை மகன் நவீனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் தங்கை மகன்கள் தினேஷ் குமார், விஜய் பிரசன்னா ஆகியோர் வந்து பார்த்தபோது அருள்ராஜ் இறந்த நிலையில் உடல் அழுகி போய் கிடந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் ஓய்வு பெல் ஊழியர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: