வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகன ஓட்டிகள் இ-பாஸ் பெற ஆர்டிஒ அலுவலகத்தை அணுகலாம்

 

ஊட்டி, மே. 4: வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் வைத்திருக்கும் உள்ளூர் பொதுமக்கள் பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து ஆர்டிஒ அலுவலகத்தில் இ-பாஸ் பெற்று கொள்ளலாம். வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வரும் 7ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்றே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் டிஎன்-43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் வாகன உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் பதிவு சான்று, காப்புச்சான்று மற்றும் நடப்பில் உள்ள புகைசான்று ஆகியவற்றுடன் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால் ஆவணங்களை சரிபார்த்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் இ-பாஸ் வழங்கப்படும். இவ்வாறு ஆர்டிஒ., தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

The post வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகன ஓட்டிகள் இ-பாஸ் பெற ஆர்டிஒ அலுவலகத்தை அணுகலாம் appeared first on Dinakaran.

Related Stories: