கோத்தகிரியில் கனமழை

கோத்தகிரி, மே 16: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், தேயிலை தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோத்தகிரியில் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில், அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காலை நேரத்தில் வெயிலும், பிற்பகல் நேரத்தில் அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வந்தது. இதனால், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

நேற்று மதியம் கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. ஒரசோலை, கட்டபெட்டு, நடுஹட்டி, அரவேனு, டானிங்டன், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பேருந்து நிலையம், ராம்சந்த், போன்ற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது, இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழை காரணமாக கோத்தகிரியில் குளிர்ச்சியான காலசூழ்நிலை நிலவியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post கோத்தகிரியில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: