பிரஜ்வல் தன்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று ஒரு பெண் புகார் அளித்தது மட்டுமில்லாமல் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலமாக கொடுத்துள்ளார். இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது இந்திய தண்டனை சட்டம் 376ன் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, பெண்கள் விடுதியில் சில மாணவிகளுக்கு இடம் ஒதுக்கக்கோருவது குறித்து பேச சென்றபோது தன்னை பிரஜ்வல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியே பல முறை பலாத்காரம் செய்ததாகவும் போலீசில் இளம்பெண் புகார் செய்துள்ளார்.
* புகார் கொடுத்த பெண் கடத்தல்
பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தனது தாயை ரேவண்ணாவும் அவரது கூட்டாளிகளும் கடத்தி அடைத்து வைத்து துன்புறுத்தி வருவதாகவும் அவரை மீட்டு கொடுக்க வேண்டும் என்றும் மைசூரு மாநகரில் உள்ள கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் 20 வயது இளைஞன் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ரேவண்ணா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* கணவனை கொலை செய்வதாக மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்த பிரஜ்வல்
போலீசில் இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில், பெண்கள் விடுதியில் சில மாணவிகளுக்கு இடம் ஒதுக்கக்கோருவது குறித்து பேசுவதற்காக ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை சந்திக்க சென்றிருந்தேன். அவசரத்தில் இருந்த எம்.பி என்னை மறுநாள் வருமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் நான் சென்றேன். அவரை பார்க்க பலபேர் வந்திருந்தனர். அதனால் முதல் தளத்தில் என்னை காத்திருக்குமாறு கூறினர். அங்கு பல பெண்கள் காத்திருந்தனர். ஒவ்வொருவராக சந்தித்தார். கடைசியில் நான் மட்டும்தான் இருந்தேன். என்னை அவரது அறைக்கு வருமாறு அழைத்தார். நான் அறைக்குள் சென்றதும் கதவை பூட்டிய பிரஜ்வல் ரேவண்ணா, அவருடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தினார். நான் மறுத்தேன். அவருடன் உடலுறவு கொள்ள மறுத்தால் என்னையும் என் கணவனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.
பின்னர், என்னை பலவந்தமாக கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டார். இதுகுறித்து யாரிடமாவது சொன்னால், அந்த வீடியோவை பரப்பிவிடுவதாக மிரட்டினார். அந்த வீடியோவில் எனது முகம் மட்டுமே தெரியும் என்றும், அவரது முகம் தெரியாது என்பதால், அந்த வீடியோவை பரப்பிவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டியே என்னை மேலும் பலமுறை பலாத்காரம் செய்தார் என்று அந்த பெண் புகார் அளித்தார். அடுத்தடுத்து அளிக்கப்படும் புகாரால் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவதற்குள் இன்னும் எத்தனை புகார்கள் குவிகிறதோ என்று பொதுமக்கள் இடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
The post ரேவண்ணா, பிரஜ்வல் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை பிரஜ்வல் மீது குவியும் பலாத்கார புகார்கள்: ஜெர்மனி விரைகிறது சிறப்புப் படை appeared first on Dinakaran.