இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி நல்ைலயன் (54) கூறியதாவது: கடந்த 37 ஆண்டுகளாக மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு பானை செய்ய 4 நாட்கள் ஆகும். தற்போது நவீன இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும் கையில் மண்பானை செய்வதுபோல அமையாது. பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பானை, சித்திரை, வைகாசி போன்ற கோடை மாதங்களில் தண்ணீர் பானை, கார்த்திகை மாதத்தில் மண் விளக்கு போன்றவற்றை தயாரிக்கிறோம். அதுபோக சமையல் பானைகள், கலய வகைகளும் செய்து விற்பனை செய்கிறோம்.
இங்கு தயாரிக்கப்படும் மண் பானைகளை கோயம்புத்தூர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் மண் பானைகளின் தேவை அதிகரித்து, விற்பனை நன்றாக உள்ளது. மண் பானையில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சி. பொதுமக்கள் மண் பாண்டங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
The post வெயிலின் தாக்கத்தால் தேவை அதிகரிப்பு; மண் பாண்டங்கள் தயாரிப்பு அமோகம் appeared first on Dinakaran.