இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தடுப்பணை செல்லும் வழியில் பொதுப்பணித்துறை சார்பில் கம்பிவேலி அமைக்கப்பட்டது. மேலும், தடையை மீறி குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மே தின விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குளிக்க வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடையை மீறி குளிக்க சென்றால், வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் ஆழியார் தடுப்பணையில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
The post ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய சுற்றுலா பயணிகள்: போலீசார் எச்சரித்து அனுப்பினர் appeared first on Dinakaran.