இதில், ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இரண்டு பேரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இருந்து சிபிசிஐடி போலீசார் நீக்கி இருந்தனர். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க மாணவியின் தாய் செல்வி அவகாசம் கேட்டிருந்தார். இந்த வழக்கு இரண்டாவது முறையாக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை மே 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். அன்றைய தினமே கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூன்று பேர்களும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
The post கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு தனியார் பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட 3 பேர் ஆஜராக உத்தரவு: மே 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.