மாற்றுப்பேருந்தில் உட்கார இடம் கிடைக்காததால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் நின்று கொண்டு சென்றனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். வழக்கமாக அனைத்து வாகனங்களிலும் திடீரென டயர் பஞ்சரானால் உடனடியாக அதனை சரி செய்யும் வகையில் மாற்று டயர் வைத்திருப்பர். ஆனால் பிரேக் டவுன் ஆகி நின்ற அரசு பேருந்தில் மாற்று டயர் இல்லை என்று கூறப்படுகிறது. மாற்று டயர் இருந்திருந்தால் கூட 10 நிமிடத்திற்குள் பஞ்சரான டயரை மாற்றி பேருந்தை இயக்கி இருக்கலாம். ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மாற்று டயர் இன்றி பேருந்து இயக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
The post பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.