மே 4ம் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் காலை 8 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மதியம் 1 மணியளவில் கொடைக்கானல் பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி கொடைக்கானல் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் வருகையையொட்டி இன்று முதல் வருகிற மே 4ம் தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்; டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை.! பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் appeared first on Dinakaran.