அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள்

அம்பாலா: அரியானா மாநில விவசாயிகள், விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கும் பாஜ வேட்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அரியானாவில் அம்பாலா தொகுதியில் பான்டோ கட்டாரியா பாஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற பான்டோ கட்டாரியாவை நாகல் கிராம விவசாயிகள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது “பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி செல்ல முயன்ற எங்களை பாஜ ஏன் அனுமதிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

அம்பாலா பேரவை உறுப்பினரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான அசீம் கோயல் விவசாயிகளை சமாதானபடுத்த முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து பான்டோ கட்டாரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர். அரியானா மாநில விவசாயிகள் பாஜவை புறக்கணிப்பார்கள் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

The post அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: