கோவை வாக்காளர் பெயர் நீக்க விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

கோவை: கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவையைச் சேர்ந்த சுதந்திர கண்ணன் ஐகோர்ட்டில் மனு தொடர்ந்துள்ளார். வாக்களிக்கும் வரை தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது எனவும் சென்னை ஐகோர்ட்டில் சுதந்திர கண்ணன் பொதுநல மனு தொடர்ந்து இருந்தார். 2019, 2021-ல் தேர்தல்களில் வாக்களித்த நிலையில் இந்த முறை பெயர் நீக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்களர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

The post கோவை வாக்காளர் பெயர் நீக்க விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: