செங்கோட்டை அருகே பைக் மோதி காயமடைந்த விவசாயி சாவு

கேடிசி நகர், ஏப்.26: செங்கோட்டை அருகே பைக் மோதியதில் காயமடைந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். செங்கோட்டை அருகேயுள்ள இலத்தூர் காந்தி காலனியை சேர்ந்தவர் சொர்ணம் (63) விவசாயியான இவர் கடந்த 23ம்தேதி இலத்தூர்- நாலுமுக்கு ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக், இவரது மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த சொர்ணத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கோட்டை அருகே பைக் மோதி காயமடைந்த விவசாயி சாவு appeared first on Dinakaran.

Related Stories: