சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

விருத்தாசலம், ஏப். 26: விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவரது அண்ணனின் நண்பரான வீரபாண்டியன் தெருவை சேர்ந்த ஒருவரின் 16 வயது மகன், சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். சிறுமியின் உடலில் மாற்றத்தை தெரிந்த அவரது பெற்றோர் அவரை விசாரித்த போது சிறுமி, சிறுவனுடன் பழகியது பற்றி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியை விருத்தாசலம் காந்திநகர் நகர்புற மருத்துவமனையில் சென்று காண்பித்த போது 8 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சிறுவனை விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார், போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: