தர்மபுரி அருகே வாலிபர் சடலம் மீட்பு கொலையா? என விசாரணை

தர்மபுரி, ஏப்.26: தர்மபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் அக்குமனஅள்ளி காப்புக்காட்டில் உள்ள மரத்தில், வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தது. அதனைக்கண்டு அவ்வழியாக சென்றவர்கள், மதிகோண்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடம் விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், சடலமாக கிடந்தவர் பென்னாகரம் கலப்பம்பாடி பகுதியைச் சேர்ந்த முனிதாஸ் மகன் மூர்த்தி(39) என்பதும், இவரை காணவில்லை என பெரும்பாலை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தர்மபுரி அருகே வாலிபர் சடலம் மீட்பு கொலையா? என விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: