ஜார்க்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா போட்டி

ராஞ்சி: ஜார்க்கண்டில் கிரிதி மாவட்டம் காந்தே பேரவை தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சர்பரஸ் அகமது கடந்த ஜனவரி மாதம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலுடன் காந்தே சட்டப்பேரவை தொகுதிக்கு மே 20ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காந்தே தொகுதியில் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிடுவார் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

The post ஜார்க்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: