புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கமம் விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: