மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

மோகனூர், ஏப்.24: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் படி பூஜை விழா மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடி படி பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மோகனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: