அரசு பஸ் கண்ணாடி உடைந்தது

கடத்தூர், ஏப்.24: கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). மினி வேன் ஓட்டுநர். இவர் நேற்று மாலை கடத்தூர்- மணியம்பாடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பில்பருத்திலிருந்து தர்மபுரி நோக்கிச் சென்ற அரசு பஸ் மணியம்பாடி அருகே பயணிகளை இறக்கி விட்டு புறப்பட தயாரானது. அப்போது, பின்னால் வந்த மினிவேன், அரசு பஸ் மீது வேகமாக மோதியது. இதில், பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. அப்போது, அந்த வழியகா வந்த கார், மினிவேன் மோதியது. இதில், காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விபத்தை ஏற்படுத்திய மினிவேன் ஓட்டுனர் ராஜேந்திரன் மீது கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ் கண்ணாடி உடைந்தது appeared first on Dinakaran.

Related Stories: