திருமண வீட்டில் உ.பி. அமைச்சர் முகத்தில் குத்து விட்ட கும்பல்

சான்ட் கபீர் நகர்: உத்தரப்பிரதேசத்தில் கலிலாபாத் கோட்வாலி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முகம்மத்பூர் கதார் கிராமத்தில் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சஞ்சய் நிஷாத் நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தார். அப்போது திருமண வீட்டில் இருந்த சுமார் 20 -25 பேர் கொண்ட கும்பல் அமைச்சரிடம் அவரது மகனான எம்பி பிரவின் நிஷாத் மற்றும் நிஷாத் கட்சி குறித்தும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் பொறுமையிழந்த அவர், எம்பி இங்கே வரும்போது நேரில் அவர்களது குறைகளை கூறும்படி அறிவுறுத்தியுள்ளார். உடனடியாக அந்த கும்பல் அமைச்சரிடம் நீங்கள் அமைச்சர் தானே நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திடீரென கும்பலில் இருந்த ஒருவர் அமைச்சர் சஞ்சய் நிஷாத் முகத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் அணிந்திருந்த கண்ணாடி உடைந்து, அவரது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டத்தொடங்கியது. உடனடியாக போலீசார் அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கோட்வாலி காவல்நிலையத்தில் அமைச்சரின் செயலாளர் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமண வீட்டில் உ.பி. அமைச்சர் முகத்தில் குத்து விட்ட கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: