இதில், வேன்மீது நேருக்கு மோதியதால் புதிதாக வாங்கிய காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், கார் மோதியதில் சரக்கு வேன் நிலைதடுமாறி உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனின் முன்புற கண்ணாடி மற்றும் முட்டைகள் அனைத்து உடைந்து நொறுங்கி சேதமாகின.
இவ்விபத்தில் வேனை ஓட்டி வந்த பில்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ரவி (55), உதவியாளர் சுரேஷ் (35) ஆகிய இருவரும் வேனின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பள்ளிப்பட்டு அருகே வேன்-கார் மோதல்: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.