இதுதவிர பலர் வீட்டிலேயே முடங்கும் சூழல் உள்ளது. பலரும் மலை பிரதேசங்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற பகுதிகளுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றனர்.
இன்னும் சில தினங்களில் கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில் அதன் தாக்கத்தின் எதிரொலியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வெப்ப அனல் காற்றும் வீசி வருகிறது. இப்படி அதிகரித்து வரும் வெயிலால் தமிழ்நாட்டில் பலருக்கும் உடல் சார்ந்த நோய்கள் வரதொடங்கியுள்ளது.
அவற்றில் ஒன்றுதான் ஹீட் ஸ்ட்ரோக். அதிகரிப்படியான வெப்பத்தை தாக்க முடியாமல் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ஓட்டு போட வரிசையில் காத்திருந்த 3 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். வெயிலின் இந்த தாக்கத்தை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். வழக்கமாக வட மாநிலங்களில் தான் இதுபோன்ற வெப்பநிலை அதிகரிப்பு உயிரிழப்பு என கேட்டு அறிந்துகொண்ட நமக்கு இந்த செய்திகள் அதிர்ச்சியை அளிக்கும் விதமாகவே உள்ளது. வயதானவர்களுக்கு இதுபோன்று ஏற்படுவது ஹீட் ஸ்ட்ரோக் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வீண் பயணங்கள் வேண்டாம்.
வெயில் காலம் முடியும் வரை முடிந்த அளவிற்கு காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படி செல்லும்போது முதலில் பாதிக்கப்படுவது சருமம். இதனால் கொப்புளங்கள், வியர்க்குரு, அதிக தாக்கத்தினால் அம்மை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் கூட அதிகமாக உள்ளது. மேலும் மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல் போன்றவையும் வெயிலால் ஏற்படும். பயணத்தின்போது சிலர் முறையாக சுத்திகரிக்கப்படாத பாக்கெட் தண்ணீரை வாங்கி குடிப்பார்கள். இதனால் காலரா வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே சுத்தமான, காய்ச்சிய குடிநீரை எடுத்துக்கொள்ளுங்கள்.
தினமும் காலை மாலை என 2 நேரமும் குளிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும். தொளதொளவென ஆடை அணிவது, லைட் கலரில் உடை உடுத்துதல், முழுக்கை ஆடைகள் குறிப்பாக கதர் ஆடைகளை உடுத்திக்கொள்வது நல்லது. டீ, காபி குடிப்பதை விட்டுவிட்டு நல்ல குடிநீர், இளநீர், மோர், தர்பூசணி போன்று நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக இருங்கள். அதிக வியர்வை காரணமாக உடல் சோர்வு ஏற்படும். எனவே அதிக அளவில்தண்ணீரை குடிக்காமல் சரியான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அதுபோல குழந்தைகளையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு உடலில் கொப்புளங்கள் அல்லது வேற் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் பார்க்காமல் மருத்துவரை அனுகுவதுதான் சரியான முறை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள்
* தலைவலி
* அதிக ரத்த அழுத்தம்
* குமட்டல் மற்றும் வாந்தி
* சுயநினைவை இழத்தல், வலிப்பு ஏற்படுதல்
* இதயத்துடிப்பு அதிகரித்தல்
* மூச்சு வாங்குதல்
* மயக்கம் வருவது போன்று இருத்தல் மற்றும் குழப்பம் அடைதல்
The post வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைந்து: ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும்போது உயிரிழப்புக்கு 2% வாய்ப்பு; மருத்துவர் தேரணி ராஜன் எச்சரிக்கை appeared first on Dinakaran.