அரசியலில் மதத்தை புகுத்த கூடாது. அது நம் நாட்டின் பாரம்பரியமல்ல. மதம் என்றால் உண்மை, சேவை என்று பொருள். ஆனால் மேடையில் நின்று கொண்டு பொய்யான வாக்குறுதிகளை தரும் மோடி, மதத்தின் உண்மையான பாதையில் செல்லவில்லை என்று அர்த்தம். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு ஒருசில தொழிலதிபர்களுக்காகவே செயல்படுகிறது. தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை ரத்து செய்த மோடி அரசு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கிறது. மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என்று பாஜவினர் சொல்கின்றனர். அவர் உண்மையில் சக்தி வாய்ந்த தலைவர் என்றால் வேலையில்லா திண்டாட்டத்தை ஏன் குறைக்கவில்லை? பணவீக்கத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை?” என்று காட்டமாக பேசினார்.
The post பொய்யான வாக்குறுதி தரும் மோடி உண்மையின் பாதையில் இல்லை: பிரியங்கா காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.