தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்ட பெருமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. இந்தியா கூட்டணியை சேர்ந்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கொள்கை சார்ந்து வகுப்புவாத சக்திகளை வீழ்த்தும் நோக்கத்தில் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டின் உரிமைகளையும், நலன்களையும் கடந்த 10 ஆண்டுகளாக பறித்து வந்த பாஜக ஆட்சிக்கு உரிய பாடத்தை புகட்டும் வகையில் இந்தியா கூட்டணியின் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திட்டமிட்டு மேற்கொண்டார். ராகுல்காந்தி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இருவரும் ஆற்றிய உரைகள் தமிழக மக்களிடையே பெரும் மாற்றத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி.
The post ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி ராகுல், மு.க.ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.