மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. நாளை மீனாட்சி திருக்கல்யாணம், 23ல் சித்திரைத் திருவிழா நடக்க உள்ள நிலையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை ரூ.500, பிச்சிப்பூ ரூ.100, முல்லை ரூ.300, கனகாம்பரம் ரூ.300, சம்பங்கி பூ ரூ.250, அரளிப்பூ, செவ்வந்தி ரூ.200க்கு விற்பனையாகிறது.