மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு வரவேற்பு

சேந்தமங்கலம், ஏப்.20: சேந்தமங்கலத்தில் பந்தல் அமைத்து, வாழைமரம் கட்டி சந்தனம், குங்குமம் கொடுத்து வாக்காளர்களை வரவேற்க, சேந்தமங்கலம் பேரூராட்சி குப்பநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முன்பு தென்னை ஓலை பந்தல் அமைத்து, குலையுடன் வாழை மரங்கள் கட்டி வரவேற்பு மேடை அமைத்து, பழத்தட்டுகள் வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் சந்தனம், குங்குமம் வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்களிக்க வைத்தனர். மேலும் பந்தல்களில் வண்ண பலூன்கள் கட்டப்பட்டிருந்தது. இளம் தலைமுறை வாக்காளர்களை வெகுவாக கவரும் வகையில், வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிகளவில் உள்ளதால், அவர்களை கவரும் வகையில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி, வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

The post மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: