இந்நிலையில் விமானம், ஹெலிகாப்டர் பயன்பாடு குறித்த விவரங்களை 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை புறநகர் மாவட்ட துணை தேர்தல் அதிகாரி தேஜாஸ் சாமெல் கடந்த 12ம் தேதி வௌியிட்ட கடிதத்தில், “விமானம், ஹெலிகாப்டர் பயன்பாடு பற்றிய தகவல்களை பிரசாரத்துக்கு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும் என்று முன்பு விதி இருந்தது. இந்த காலக்கெடு தற்போது 24 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசியல் கட்சியினர் விமானம், ஹெலிகாப்டர் பயன்பாடு, அவை புறப்படும் இடம், சேருமிடம் மற்றும் அதில் பயணிப்பவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.
The post தேர்தல் பிரசாரங்களில் விமானம், ஹெலிகாப்டர் பயன்பாடு பற்றி 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.