அப்போது பேசிய ராதிகா சரத்குமார், அதிமுக, தேமுதிக கூட்டணி கட்சியினர் யாரை பிரதமராகுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். அதனால் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். இதையடுத்து புதுச்சூரங்குடி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா, அப்பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அப்போது கும்மியடிக்கும் பெண்களுடன் ராதிகா சரத்குமாரும் சேர்ந்து கும்மியடித்து வாக்கு சேகரித்தார்.
The post பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.. விருதுநகரில் கோவில் விழாவில் கும்மியடித்து வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார்!! appeared first on Dinakaran.