என் பெயர் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி அல்ல.. திகாரில் இருந்து டெல்லி மக்களுக்கு செய்தி

புதுடெல்லி: “என் பெயர் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி அல்ல” என திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் செய்தி அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், “திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவால் மோசமாக நடத்தப்படுகிறார். ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு கூட அவரது மனைவி, வழக்கறிஞரை வராண்டாவில் வந்து சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. மற்ற கைதிகளுக்கும் சிறை அலுவலகத்தில் அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதி தரப்படுகிறது. ஆனால், கெஜ்ரிவால் கண்ணாடி தடுப்புக்கு பின்னால் இருந்துதான் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சந்திக்க, பேச அனுமதி தரப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு சிறையில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.

பொறமை, பழி வாங்கல் காரணமாக கெஜ்ரிவாலை பலவீனப்படுத்த பாஜ முயற்சிக்கிறது. ஆனால் அவருக்கு தரப்படும் தொல்லைகளால் கெஜ்ரிவால் வலுவாக வௌிப்படுவார். “என் பெயர் கெஜ்ரிவால், நான் தீவிரவாதி கிடையாது” என டெல்லி மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் செய்தி அனுப்பி உள்ளதாக சஞ்சய் சிங் கூறினார்.

The post என் பெயர் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி அல்ல.. திகாரில் இருந்து டெல்லி மக்களுக்கு செய்தி appeared first on Dinakaran.

Related Stories: