இந்நிலையில், நேற்று மதியம் புற்கள், செடி – கொடிகளில் திடீரென தீப்பற்றியது. பின்னர், மளமளவென அப்பகுதியில் பல இடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் தலைமையில், மாமல்லபுரம் மற்றும் காலவாக்கம் தீயணைப்பு வீரர்கள் 2 வானங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 2 ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், 5 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மரங்கள், புல்வெளி, செடி – கொடிகள் முழுவதும் தீயில் எரிந்து கருகி சாம்பலானது. இந்த திடீர் தீ விபத்தால் மாமல்லபுரம் இசிஆர் சாலை புகை மூட்டமாக காணப்பட்டது.
The post மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி வளாகத்தில் திடீர் தீ: செடி, கொடிகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.