இந்த கருத்து கணிப்பின் படி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி 52% வாக்குகளையும் அதிமுக கூட்டணி 23% வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் 19% வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் இண்டியா கூட்டணி கைப்பற்றும் பட்சத்தில் தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக இடம்பெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கேரளாவில் இண்டியா கூட்டணி மொத்தமுள்ள 20 தொகுதிகளையும் கைப்பற்றும் என ஏபிபி செய்தி நிறுவனம் – சி-வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாது என கருத்து கணிப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு இண்டியா கூட்டணி 43.4% பாஜக கூட்டணி 21.2% வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
The post மக்களவைத் தேர்தலில் மொத்தமாக ஸ்வீப் செய்யும் திமுக கூட்டணி.. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வெல்லும் : கருத்து கணிப்பில் தகவல் appeared first on Dinakaran.