சாராய வியாபாரி குண்டாசில் கைது

வேலூர், ஏப்.15: கே.வி.குப்பத்தில் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்றதாக பசுமாத்துரை சேர்ந்த ரவி(46), என்பவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரவி மீது ஏற்கனவே சாராயம் விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன், கலெக்டர் சுப்புலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதற்கான நகலை சிறையில் உள்ள ரவியிடம் போலீசாரால் வழங்கப்பட்டது.

The post சாராய வியாபாரி குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: