வீரமரசன்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் இணையசேவை பாதிப்பால் மின் நுகர்வோர் பாதிப்பு

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.14: வீரமரசன்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் இணைய வழி சேவை பாதிப்பால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் நுகர்வோர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் வீரமரசன்பேட்டையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த மாதம் 31ம் தேதி முதல் இணைய வழி (ஆன்லைன்) சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வோர் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று மின் கட்டணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இயலாமல் தனியார் கணினி மையங்களில் சேவை கட்டணம் செலுத்தி மின்சார கட்டணம் செலுத்தக்கூடிய அவல நிலையில் உள்ளது.மேலும் இந்த மாதத்திற்கான மின் கணக்கீடுகளை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய முடியாமல் உள்ளது. இது தொடர்பாக மின்வாரிய உதவி மின் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரிடம் பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு முறையிட்டும் இதுவரை இணைய வழி சேவை சரி செய்யப்படவில்லை. இம்மாதம் மின் கணக்கீடு எடுக்கப்பட்டு இணையத்தில் ஏற்றவில்லை.

தங்கள் வீடுகளுக்கும் கடைகளுக்கும் எவ்வளவு மின் கட்டணம் எவ்வளவு வரும் என்றும், எப்பொழுது கடைசி தேதி என்றும் எந்த விவரமும் தெரியாமல் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வணிகர்களும் ஒருவித பதற்றத்துடன் இருந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், தமி்ழ்நாடு மின்சார வாரியமும் உடனடியாக வீரமரசன்பேட்டை தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் இணைவழி சேவையை சீரமைத்து பொதுமக்கள் எளிதாக மின்கட்டணம் செலுத்தவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வீரமரசன்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் இணையசேவை பாதிப்பால் மின் நுகர்வோர் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: