வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

திருவள்ளூர், ஏப். 14: தமிழக நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணிக்கை அறை உள்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளார்கள் கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கி, நடைபெற்று வருகின்ற பணிகளை வரும் ஏப்ரல் 14க்குள் முடித்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் விஜய் ஆனந்த், ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், உதவி செயற்பொறியாளர் வேலு, திருவள்ளூர் வட்டாட்சியர் செ.வாசுதேவன், நகராட்சி ஆணையாளர் த.வ.சுபாஷினி, கலால் உதவி ஆணையர் ரங்கராஜன் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: