நெல்லை அருகே உரிய ஆவணமின்றி பைக்கில் கொண்டுசென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்

நெல்லை,ஏப்.14: நெல்லை அருகே உரிய ஆவணமின்றி பைக்கில் கொண்டுசென்ற ரூ.60 ஆயிரத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளங்குளி வாரச்சந்தை அருகே பறக்கும்படை அதிகாரி ஸ்வர்னலதா தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒருநபரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த சோதனையில் அவர் கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பாலமுருகன் மகன் இசக்கிமுத்து(26) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 60 ஆயிரத்து 500 ரூபாயை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை பறக்கும்படையினர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

The post நெல்லை அருகே உரிய ஆவணமின்றி பைக்கில் கொண்டுசென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: