இந்தியா கூட்டணி பிரசாரத்தில் ரகளை பாஜக கவுன்சிலர் மீது வழக்கு

 

கடலூர், ஏப். 14: கடலூரில் இந்தியா கூட்டணி பிரசாரத்தில் ரகளையில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இவருக்கு ஆதரவாக கடலூர் பகுதியில் ஐயப்பன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, திமுக மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாஜக கவுன்சிலர் சக்திவேல், பிரசார வாகனத்தை மறித்து ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து திமுக மாநகர செயலாளர் ராஜா, திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ரகளையில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post இந்தியா கூட்டணி பிரசாரத்தில் ரகளை பாஜக கவுன்சிலர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: