பாஜ ஆட்சியா? வாய்ப்பே இல்லை: அடித்துக்கூறுகிறார் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், ‘பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒன்றியத்தில் ஆட்சியமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடைக்காது. இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறும்’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிவருமா என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தராமையா, ‘இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும். நானே தொடர்ந்து முதல்வராக பதவியில் நீடிப்பேன் அல்லது கட்சி மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன்’ என்றார்.

The post பாஜ ஆட்சியா? வாய்ப்பே இல்லை: அடித்துக்கூறுகிறார் சித்தராமையா appeared first on Dinakaran.

Related Stories: