மேலும், கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான 19.4.2024 அன்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விடுப்பு நாளுக்கான ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும் பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும், என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு தேர்தல் நடைபெறும் நாளான 19.4.2024 அன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் சென்னை மாவட்டத்திற்கு வடசென்னை/ தென் சென்னை/ மத்திய சென்னை என தனித்தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
The post நாடாளுமன்ற தேர்தல் தினத்தில் விடுமுறை அளிக்க தவறும் நிறுவனம் மீது நடவடிக்கை: தொழிலாளர் துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.