100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு

வாலாஜாபாத், ஏப்.13: வாலாஜாபாத்தில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழக முழுவதும் வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில், ஒலிபெருக்கி விழிப்புணர்வு, துண்டு பிரசுரங்கள் வழங்குவது, சுவரொட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு விழிப்புணர்வு மூலம் உறுதி மொழி ஏற்படு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பேரூராட்சியின் சார்பில் 100 சதவிகிதம் வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, துண்டு பிரசுரங்களை பேருந்து நிலையம், ராஜவீதி, மார்க்கெட், ரயில் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கி வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது.

The post 100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: