திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன்பெரியசாமி பிரசாரம்

தூத்துக்குடி, ஏப்.13: தூத்துக்குடியில் கொட்டும் மழையிலும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியை ஆதரித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் வியாபாரிகள், நடைபயிற்சி மேற்கொள்கிறவர்கள், இளைஞர்கள் ஆகியோரை சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகளையும், மாநகராட்சியில் செய்யப்பட்ட திட்டங்களையும் துண்டு பிரசுரங்கள் மூலம் விநியோகித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று காலை கொட்டும் மழையிலும் மேயர் ஜெகன் பெரியசாமி சக்திவிநாயகபுரம், எழில்நகர், எஸ்கேஎஸ்ஆர் காலனி, கந்தசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று கனிமொழிக்கு ஆதரவாக, வாக்கு சேகரித்தார்.

அப்போது, மாநகராட்சி கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், கற்பககனி, திமுக பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், இசக்கிமுத்து, பெரியசாமி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துதுரை, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, முன்னாள் வட்டச்செயலாளர் மாரியப்பன், பகுதி பிரதிநிதிகள் பேச்சிமுத்து, புஷ்பராஜ், சாமிவேல் மற்றும் வக்கீல் மணி, பிரபாகர், ஜேஸ்பர், டூவிபுரம் கண்ணன், லிங்கராஜா, காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகர், இளைஞர் அணி தலைவர் அருண்குமார், வார்டு தலைவர் மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன்பெரியசாமி பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: