ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதியரின் கால்கள் முறிந்தன

திருமங்கலம், ஏப். 13: கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் சிங்கதுரை (35). இவரது மனைவி ஜெயலட்சுமி (28), உசிலம்பட்டியை சேர்ந்தவர். இங்கு நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற இவர்கள் நேற்று குடும்பத்தினருடன் திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். அங்கு கோவை – நாகர்கோவில் ரயிலில் ஏறினர். பின்னர் ரயில் கிளம்பியதும் எதிர்பாராவிதமாக ஜெயலட்சுமி ஓடும் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே தவறி விழுந்தார்.இதில் அவரது கால்கள் முறிந்தன. மனைவியின் நிலை கண்டு பதறிய சிங்கதுரை அவரை மீட்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்தார். இதில் அவரது கால்களும் முறிந்தன. இதனைத்தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு தம்பதியர் மீட்கப்பட்டனர். இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதியரின் கால்கள் முறிந்தன appeared first on Dinakaran.

Related Stories: