வத்தலக்குண்டு குரும்பபட்டியில் வாழை நோய் தடுப்பு பயிற்சி

வத்தலக்குண்டு, ஏப். 13: வத்தலக்குண்டு அருகே குரும்பபட்டியில் வேடசந்தூர் எஸ்ஆர்எஸ் வேளாண் கல்லூரி மாணவிகள் தீபனா, திப, துர்கா தேவி, கவுசிகா, இன்முகில், ஜெயந்தி, கல்யாணி சுரேஷ், காவேரி, கிருஷ்ணா ஆகியோர் வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் களப்பணி ஆற்றினர். அப்போது அங்குள்ள வாழை விவசாயிகளை சந்தித்து வாழையில் ஏற்படும் கிழங்கு துளைக்கும் கூன்வண்டு நோய் தடுப்பது பற்றி செயல் முறை விளக்க பயிற்சிகள் வழங்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post வத்தலக்குண்டு குரும்பபட்டியில் வாழை நோய் தடுப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: