அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு..
*கோவையில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கோவையில் சர்வதேச விமான முனையம் அமைக்கப்படும். கோவையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அமைக்கப்படும்.
*கோவையில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்கப்படும். ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம். கோவை மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*கோவையில் 4 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும். நாடு முழுவதிலும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்கப்படும்.
*காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும். கோவை தொகுதியில் ஐஐஎம் அமைக்கப்படும்.
*சர்வதேச தரமுள்ள நகரமாக 5 ஆண்டுகளில் கோவை மாற்றத்தை சந்திக்கும்.ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பணிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
*கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும்.
*கோவை தொகுதியில் 250 மக்கள் மருந்தகம் நிறுவப்படும். கோவையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
*கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
*சரவணம்பட்டியில், மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
The post கோவையில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம், 4 நவோதயா பள்ளிகள், ஐஐஎம் அமைக்கப்படும்: வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!! appeared first on Dinakaran.