சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி கொடுத்த புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சின்னங்கள் ஒதுக்கீடு புத்தகத்தில் எப்படி இருந்ததோ அப்படித்தான் அச்சிடப்பட்டுள்ளது. நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. நீலகிரியில் வேட்பாளரின் செலவு கணக்கை குறைத்து காட்ட சொன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பார்வையாளர் புகார் கூறுகிறார். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். தமிழக அரசால் மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகைக்கு தடையில்லை. அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே, மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்க தேர்தல் ஆணையத்திடம் எந்த அனுமதியும் பெற தேவையில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை :தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு appeared first on Dinakaran.