அறந்தாங்கி அருகே மக்களை அச்சுறுத்தும் உடைந்த மின்கம்பம்


அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் கொன்னக்காட்டில் உடைந்து கிடக்கும் மின்மாற்றி கம்பத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கி அருகே நாகுடி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கொன்னக்காடு கிராமத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன் மின் மாற்றி கம்பம் அடியில் உடைந்து சாந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதையடுத்து அந்த மின்மாற்றி கம்பத்தில் இருந்து மின் சப்பளை நிறுத்தப்பட்டது. இந்த மின்மாற்றி கம்பத்தை உடனே மாற்றி அந்த பகுதிக்கு மின் சப்பளை கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மின்சார வரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கி அருகே மக்களை அச்சுறுத்தும் உடைந்த மின்கம்பம் appeared first on Dinakaran.

Related Stories: