சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை!.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,705-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.89-க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,725-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.88.50-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இப்படியே போனால் ஓரிரு நாளில் சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை!. appeared first on Dinakaran.

Related Stories: